Home > Uncategorized > ஐபிஎல் கிரிக்கெட்: இன்று 2 வது நாள் ஏலம்………!!!!!!!!!

ஐபிஎல் கிரிக்கெட்: இன்று 2 வது நாள் ஏலம்………!!!!!!!!!

இந்தியன் பிரிமியர் லீக்கின் இருபதுக்கு 20 போட்டிகளுக்காக, இன்று இரண்டாவது நாளாக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்தமாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 44 நாட்களில் 59 ஆட்டங்கள் இடம் பெறவுள்ளது.

இதில், பங்கேற்கும் அணிகள் 8 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கேற்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்களை பிரபல கோடீஸ்வரர்கள் ஏற்கனவே ஏலத்தில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஏலம் இன்று நடைபெறுகிறது.முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர். 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுடன் இன்றைய ஏலம் தொடங்குகிறது.

இன்றைய ஏலத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக், சல்மான் பட், மொஹமத் யூசுப், யாசிர் ஹமீத், சொஹைல் தன்வீர் மற்றும் நியூசிலாந்தின் கைல் மில்ஸ், ஜீதன் படேல், பிராண்க்ளின், மார்டின், டெய்லர், புல்டன், ஜேமி ஹவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், பில் ஜாக், ப்ரெட் க்ரீவ்ஸ், லூக் போமர்பாஷ் ஆகிய வீரர்களும் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment