Babe, Tell me you love me
I hope I hear it when I’m in love
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வெளியே
கரையில் கரைந்து இருக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி
(காதல் வந்தால் …)
உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It’s never late, Don’t hesitate
சாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி …
(காதல் வந்தால் …)
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அனை தந்தாய் கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிரையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி …
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்… உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு…!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி
முதல் முதல் குடித்த மலபார் பீடீ
முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதலகாவே பழகிய நீச்சல்
முதல் முதலாகவே ஒட்டிய சைக்கிள்
முதல் வகுபெடுத்த மல்லிகா டீச்சர்
முதல் முதலாகவே அப்பா அடித்தது
முதல் முதலாகவே சாமிக்கு பயந்தது
முதல் முதலாகவே வானவில் ரசித்தது
முதல் முதலாகவே அரும்பியே மீசை
முதல் முதலாகவே விரும்பிய இதயம்
முதல் முதலாகவே எழுதியே கடிதம்
முதல் முதலாகவே வாங்கிய முத்தம்