Archive

Archive for November26, 2009

Unnodu Naan Iruntha— Iruvar

November26, 2009 1 comment


உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்.

எண்ணூறு ஆண்டுகளாய் இதயதில் கணக்குதடி…

பார்வையிலே சில நிமிடம்

பயதோடு சில நிமிடம்

கட்டி அணைத்தப்படி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்

எல்லா இடங்களிலும் முத்தங்கல் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

எது ஞாயம்  எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை.

அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வலியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைகும் கேள்வி இல்லை.

அச்சம் களைந்தேன்

ஆசையிணை நீ அணைத்தாய்.

ஆடை களைந்தேன்.

வெட்கத்தை நீ அணைத்தாய்.

கண்ட திரு கோலம் கனவாய் மறைந்தாலும்.

கடைசியிலே அலுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

Follow

Get every new post delivered to your Inbox.