விஜயகாந்தின் ‘அரசாங்கம்’……!!!!!!!!
தமிழ் திரையுலகில் ரஜினி, கமலின் 100வது படங்களான ‘ஸ்ரீராகவேந்திரர்’ மற்றும் ‘ராஜபார்வை’ ஆகியவை பரபரப்பாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக ஏமாற்றம் அளித்தவை.
ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட். தற்போது விஜயகாந்த் நடித்துகொண்டிருக்கும் ‘அரசாங்கம்’ அவரது 150வது படம். இதையும் வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கிடுகிறார் விஜயகாந்த்.
இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சில சர்வதேச குற்றவாளிகளை பிடித்ததோடு, சில பாடல் காட்சிகளையும் படம்பிடித்து வைத்திருக்கிறார்.
ஆனாலும், ஏப்ரலில் ரிலீசாகும் ‘அரசாங்கம்’ விஜயகாந்துக்கு வெற்றியை தேடிதருமா அல்லது அவரை ஏப்ரல் ஃபூல் ஆக்குமா என்பது அடுத்தமாதம் தான் தெரிய வரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தேவை!!!!
கர்ப்பிணி பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பில் ‘பார்ட்னர்ஷிப்’ என்ற தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் மோகன்தாஸ் கூறியதாவது:
கர்ப்பிணிப் பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்புதான் மிகப்பெரிய பலம். குறிப்பாக கணவர் மற்றும் அவரது தங்கைகளின் ஒததுழைப்பு முக்கிய தேவை. இது, கர்ப்பிணி பெண்களை உடல் மற்றும் மன ரீதியாக பலப்படுத்தும்.
கர்ப்பணி பெண்கள் முதல் மாதத்திலிருந்தே முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துக்கொள்வது அவசியம். இதன் மூலம் பிரசவக் காலத்தில் குழந்தைகள் இறப்பு மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு போன்றவற்றை தவிர்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பான குடும்பக்கட்டுபாடு போன்றவை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கவிதை — பயம்
கவிதை எழுத பயம்
உன் பெயரை விடவா? என்று
ஓவியம் தீட்ட பயம்
உன் முகத்தை விடவா? என்று…..
மேலும் படிக்க….
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=782&Itemid=164
ஐபிஎல் கிரிக்கெட்: இன்று 2 வது நாள் ஏலம்………!!!!!!!!!
இந்தியன் பிரிமியர் லீக்கின் இருபதுக்கு 20 போட்டிகளுக்காக, இன்று இரண்டாவது நாளாக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்தமாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 44 நாட்களில் 59 ஆட்டங்கள் இடம் பெறவுள்ளது.
இதில், பங்கேற்கும் அணிகள் 8 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கேற்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்களை பிரபல கோடீஸ்வரர்கள் ஏற்கனவே ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஏலம் இன்று நடைபெறுகிறது.முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர். 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுடன் இன்றைய ஏலம் தொடங்குகிறது.
இன்றைய ஏலத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக், சல்மான் பட், மொஹமத் யூசுப், யாசிர் ஹமீத், சொஹைல் தன்வீர் மற்றும் நியூசிலாந்தின் கைல் மில்ஸ், ஜீதன் படேல், பிராண்க்ளின், மார்டின், டெய்லர், புல்டன், ஜேமி ஹவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், பில் ஜாக், ப்ரெட் க்ரீவ்ஸ், லூக் போமர்பாஷ் ஆகிய வீரர்களும் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழர்களை அழிக்க துணை : இந்தியாவுக்கு புலிகள் கண்டனம்….!!!!!
டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டதற்காக இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் அளித்துள்ள அறிக்கை ஒன்றில், டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மிகவும் புண்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகி, தமிழர்கள் மீது பயங்கரமான வன்முறைத் தாக்குதலை நடத்தி வரும் இலங்கையின் ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்குரியது என அந்த அறிக்கையில் அந்த இயக்கம் கூறியுள்ளது.
இலங்கை அரசின் ராணுவ வழித் தீர்வுக்கு ஒருபுறமும், கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.
ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும்போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.
சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணை போகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.
இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக ராணுவ ரீதியாக இலங்கை அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.
இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத் தமிழர்களைத் தொடர்ந்து இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு மிகப்பெரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும்.
இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.